Breaking News
recent

சிறுபான்மையினர் 10 சதவீதத்துக்கு மேல் இருந்தாலே அங்கு வன்முறை வெடிக்கிறது! – பாஜக எம்பியின் அடுத்த சர்ச்சை!



சிறுபான்மையினர் 10 சதவீதத்துக்கு மேல் ஒரு பகுதியில் இருந்தாலே அங்கு வன்முறை ஏற்பட்டுவிடுகிறது என்று சர்சைக்குரிய பாஜக எம்.பி யோகி ஆதியநாத் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதவன்முறைகள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேசிய யோகி ஆதித்யநாத், ‘ஒரு பகுதியில் 10 முதல் 20 சதவீதம் வரை சிறுபான்மையினர் இருந்தால் அங்கு சிறிய அளவில் மத வன்முறை ஏற்படுகிறது. 
இதுவே அவர்கள் 20-35 சதவீதம் இருந்தால் வன்முறை பெரிய அளவில் அதிகரிக்கிறது. அவர்கள் 35 சதவீதத்துக்கும் மேல் ஓரிடத்தில் இருந்தால் அங்கு முஸ்லிம் இல்லாதவர்கள் இருக்கவே முடிவதில்லை. சிறுபான்மையினர் குறித்து நடப்பு நிகழ்வைத்தான் நான் கூறியுள்ளேன்.
தங்கள் மீது எந்த வகையில் தாக்குதல் நடத்தப்படுகிறதோ அதே வகையில் ஹிந்துக்கள் பதிலடி தரவேண்டும். சிறுபான்மையினர் எங்களில் ஒருவரை கொலை செய்தால், அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. எதிர்தரப்பினர் அமைதியாக இருக்காவிட்டால், அமைதியாக இருப்பது எப்படி என்பதை நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுப்போம்.
அவர்கள் மனிதர்களாக இல்லாமல் தீய சக்திகளாக இருக்கும்போது நாம் பதிலடி கொடித்துதான் ஆகவேண்டும். எனது ஒரு கையில் ஜெபமாலை உள்ள அதே நேரத்தில் மற்றொரு கையில் ஈட்டி உள்ளது.
இந்து பெண்களை குறிவைத்து காதலித்து திருமணம் செய்வதாக கூறி மதமார்றம் செய்வது என்பது இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதி. லவ்ஜிகாத் என்பது பொய்யாக உருவாக்கப்பட்ட வாசகம் அல்ல. நீதிமன்ற உத்தரவுகள் சில இதற்கு ஆதாரமாக உள்ளன.’ இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
ஏற்கனவே சமீபத்தில் ஒரு கூட்டத்தில், “ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் 100 முஸ்லிம் பெண்களை இந்துவாக மதம் மாற்ற வேண்டும். அவர்கள் ஒரு இந்துவை கொலை செய்தால். நாம் 100 பேரை..” என்று ஆதித்யநாத் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி வரும் வேளையில் அவரின் இந்த பேச்சு மேலும் மதவெறியை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.