Breaking News
recent

வாக்கு எந்திரத்தில் மாற்றம் வேண்டும் - உச்ச நீதிமன்றம் அதிரடி!


புதுடெல்லி: "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்கும் வகையில்  வாக்காளர்களுக்கு வசதி ஏற்படுத்த வாக்கு எந்திரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
குற்றப் பின்னணி உள்ள எம் எல் ஏ, எம்பிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணம் ஆகும் வரை, அவரகள் தேர்தலில் நிற்கத் தடை விதிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
 
 மத்திய அரசு இதற்கு இடைக்காலத் தடை விதித்து, புதிய அவசர சட்டத்தை நிறைவேற்ற, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அந்த சட்ட திருத்த மசோதாவை அனுப்பி வைத்துள்ளது.
 
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இது குறித்த பொது நல மனு ஒன்றின் மீதான விசார்ணையில்  தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.
 
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
"தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமை உண்டு. எதிர்மறையான வாக்கினை பதிவு செய்ய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரித்து விட்டு இவர்களில் யாரையும் தேர்வு செய்ய விரும்பவில்லை என்பதை வாக்காளர்கள் பதிவு செய்யும் வகையில் ஓட்டு எந்திரத்திலும், வாக்கு சீட்டிலும் இதற்கான வசதியை தேர்தல் கமிஷன் ஏற்படுத்த வேண்டும்.
 
நிராகரிப்பு வசதி மூலம் தேர்தலில் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மை அதிகரிக்கும். மேலும், வேட்பாளர்கள் அனைவரும் நிராகரிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக நேர்மையானவர்கள் மற்றும் மக்களின் பிரதிநிதியாக செயல்படும் திறமை உடையவர்களை மட்டுமே தேர்தலில் நிறுத்த வேண்டிய நெருக்கடி அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும்."
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 

VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.