Breaking News
recent

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை திட்ட விழிப்புணர்வு முகாம் கலெக்டர் தகவல்..



படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை மாவட்டம் முழுவதும் தெரியப்படுத்த வட்டார அளவிலான விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நேர்காணல் முகாம் நடைபெறுகிறது.


அதன்படி 1ம்தேதி வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு திட்டவிளக்க முகாம், மதியம் 2.30 மணிக்கு நேர்காணல், 3ம் தேதி வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு திட்ட விளக்கமுகாம் மதியம் 2.30 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

அதேபோல 4ம்தேதி ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 11மணிக்கு திட்ட விளக்கமுகாம், மதியம் 2.30 மணிக்கு நேர்காணல், 8ம்தேதி பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 11மணிக்கு திட்ட விளக்கமுகாம் மதி யம் 2.30 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

இந்த விழிப்புணர்வு முகாம்களில் கலந்துகொள்ள விரும்புவோர் குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், சிறப்பு பிரிவினர் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். வருமான உச்சவரம்பு ரூ1.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

தற்போது வசிக்கும்இடத்தில் குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்கு மேல் வசிப்பராக இருத்தல்வேண்டும். எந்த ஒரு திட்டத்திலும் மானியத்துடன் கடன் பெற்றவராக இருத்தல் கூடாது.

விழிப்புணர்வு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாற்று சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், குடும்பஅட்டை அல்லது இருப்பிட சான்று அசல் மற்றும் 2 நகல்கள், திட்ட அறிக்கை 2 நகல்கள், டின் நம்பர் உள்ள விலைப்பட்டியல் அசல் மற்றும் 2 நகல்கள், பாஸ்போட் சைஸ் போட்டோ 2, சாதிச்சான்று அசல் மற்றும் 2 நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுவரவேண்டும்.

அன்றைய தினமே நேர்காணலில் தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சேவை வங்கிக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

இந்த வாய்ப்பை இளைஞர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.
 
VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.