வெயில் 35 டிகிரி செல்சியஸை தாண்டி அடிக்கின்ற போது, ஆங்கில காய்கறிகளை பயிரிட்டு சோதனை செய்ய மிக தைரியமான ஒரு இதயம் தேவைபடுகின்றது. மேலும் இதை மிகத் துணிச்சலான கரியம் என்றே வர்ணிக்கலாம்.
காளிபுளவர், முட்டகோசு, கேரட், மேலும் பீட்ரூட் போன்ற ஆங்கில காய்கறிகள் பொதுவாக மலைப்பிரதேசங்களில் அதுவும் குறிப்பாக நீலகிரியில் பயிரிடப்படுகின்றது. நீலகிரியில் கோடைகாலங்களில் எப்போதாவதுதான் 25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையைத் தாண்டும். அதே போல், தமிழகத்தின் மற்றொர் பகுதியான ஹோசூரிலும் ஆங்கில காய்கறிகள் பயிரிட ஏற்ற சீதோஷ்ன நிலையை கொண்டுள்ளது.
ஆனால், குவைத்தில் 15 வருடங்கள் ஒரு கனரக வாகன ஓட்டுனராகப் பணி புரிந்துவிட்டு, கடந்த 2008ல் தமிழகம் திரும்பிய அ. முஹம்மது ஜின்னா அவர்கள், இந்த ஆங்கில காய்கறிகளை பயிரிட்டு சோதித்த ஒரு மிகப் பெரிய தைரியசாலியாவார்.
35 டிகிரி செல்சியஸ் வெயில் ஒரு சாதாரண சீதோஷ்ன நிலையாக கருதும் பெரம்பலூர் மாவட்டதில், மக்கா சோளம், பருத்தி, சிறிய வெங்காயம் போன்ற விளைபொருட்களுக்கு அறிமுகமான பெரம்பலூரில், ஜின்னா அவர்கள் ஆங்கில காய்கறிகளை வளர்ப்பதின் மூலம் ஒர் புதிய பட்டியலை உருவாக்கியுள்ளார்.
'இதுவரை நான் சாதித்திருப்பவைகளைக் கொண்டு நான் திருப்தியடையவில்லை. இன்னும் மிக நீண்ட பயணம் நான் செல்ல வேண்டியுள்ளது என்றே நம்புகின்றேன்' என்று 43 வயதான இந்த விவசாயி கூறுகின்றார்.
இவர் 10-ஆம் வகுப்பு முடித்திருக்கின்றார். மேற்கொண்டு சில கணினி நெட்வெர்க்கிங் படிப்புகளை படித்திருக்கின்றார்.
பெரம்பலூர் மாவட்டதில் உள்ள விசுவக்குடி கிராமத்தைச் சார்ந்த இவர் நான்கு ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்களை பயிரிடும் முயற்சிகளை அவர் ஆரம்பித்திருக்கின்றார்.
மேலும் அவர் கூறுகின்றார்: நான் மரவள்ளி கிழங்குகளை பயிரிட முதலில் முயற்சி செய்தேன். ஆனால் இழப்புகளால் பாதிக்கப்பட்டடேன். மரவள்ளி கிழங்குக்கான குறைந்த பட்ச விலை தமிழ் நாட்டிலே நிர்ணயிக்கப்பட வில்லை. இதனால் இடைத்தரகர்களின் தயவில் நாங்கள் இயங்க வேண்டியுள்ளது.
2011-ல் அடுத்த முயற்சியாக மக்கா சோளத்தை பயிரிட்டார். ஆனால் அதுவும் அவருக்கு போதுமான லாபத்தைத் தரவில்லை. அடுத்து, பிபிடி (BPT) நெற் பயிர் விளைவித்தார். ஓர் நல்ல மகசூலையும் கண்டாலும், 5000 ரூபாய் மட்டுமே அவருக்கு லாபமாக கிடைத்தது.
அவர் கூறுகின்றார்: 'நெற்பயிரை வளர்க்க அதிமாக பராமரிப்பு தேவைப்படுகின்றது. மேலும் உரங்களையும், பூச்சி கொல்லி மருந்துகளையும் அதிகமான விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது'.
மேலும் அவர் கூறும்போது: 'சூப்பர் பொண்ணி' (டிலக்ஸ்) என்ற நெற்பயிரை இரண்டு ஏக்கரில் பயிரிட்டேன் இதில் 76 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகள் ஓர் ஏக்கருக்கு அறுவடை செய்தேன். ஒரு மூட்டை 1220 ரூபாய் வீதம் விற்றேன். ஆனால் உரங்களின் விலை மொத்த லாபத்தையும் முழுங்கிவிட்டது. என் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கவில்லை. நிலக்கடலையும் பயிரிட்டேன் .... என்றார்.
கடந்த மார்சு மாதம் முதல், தேவையான மழை பொழியவில்லை. வருடத்தின் சராசரி மழைப் பொழிவு 791 மில்லி மீட்டர் ஆகும், ஆனால் 2012-ல் 676 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
இங்கு காய்கறிகள் பயிரிடுவதைத்தவிர வேறு எந்த வழியையும் என்னால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. மிளகாய், தக்காளி, கேரட், பீட்ரூட், முட்டகோசு, காளிபிளவர் போன்ற காய்கறிகளை 6 முதல் 8 சென்ட் பரப்பளவில் பயிரிட முயற்சித்தேன். மற்ற பயிர்களைவிட குறைந்த அளவு நீர் பாசனமே இந்த பயிர்களுக்கு போதும் என்று நான் உறதியாக நம்புகின்றேன்.
'கிணற்றை ஆழப்படுத்தும் முயற்சியையும் செய்து கொண்டு இருக்கின்றேன். முன்னதாக 67-அடி ஆழமுள்ளதாக இருந்தபோது, 5 ஹெச்பி மோட்டாரை பயன்படுத்தி 30 நிமிடங்கள் நீர்ப் பாய்ச்ச முடிந்தது. ஆனால் தற்போது, மேலும் 15-அடி ஆழம் தோண்டியும், 15 நிமிடங்கள் மட்டுமே நீர்ப் பாய்ச்ச முடிகின்றது.
தற்போது நிலவும் வறட்சிக்கு எனது வாழ்த்துக்கள். போதுமான தண்ணீரைப் பெறுவதற்கு, 50-அடி சுற்றளவு கொண்ட இந்த கிணற்றை 110-அடி வரை ஆழப்படுத்த வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்தினார்கள். இதற்கு குறைந்த பட்சம் 2 லட்சத்து 40 ரூபாய் செலவாகும். ஆனால் என்னால் இவ்வளவு செலவு செய்ய முடியாது. ஆகையால் பக்கவாட்டில் ஒரு துளை போடலாம் என்று முயற்சிக்கிறேன். இது ஒரு வேளை கணிசமான அளவுக்கு தண்ணீரின் அளவை அதிகப்படுத்தக் கூடும்.
2100 கிலோ காளிபுளவரையும், 2300 கிலோ முட்டை கோசையும் அவர் அறுவடை செய்திருக்கின்றார். ஆனால் பீட்ரூட்டின் தரத்தில் அவர்க்கு மகிழ்ச்சியில்லை. காரணம், தண்ணீர் பற்றாக்குறை வருகின்றபோது அது பாதிப்படைந்து விடுகின்றது.
சொட்டு நீர் பாசனத்திற்குறிய மானியத்தை பெறுவதற்கு அவர் விண்ணப்பித்துள்ளார். மேலும் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர் நிலத்தை பார்வையிட உறுதியளித்துள்ளார்கள்.
மஞ்சளையும், பச்சை தீவணத்தையும் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட அவர் திட்டமிட்டிருக்கிறார். 'நான் இரண்டு கறவை மாடுகளையும் வளர்க்க விரும்புகிறேன்' என்கிறார்.
'என்னைப் போன்ற புதிய விவசாயிகள் அறுவடை செய்யும் விளைபொருட்களை 'உழவர் சந்தையில்' விற்க அனுமதிக்க வேண்டும்' என்ற வேண்டுகோளை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு வைக்கின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக