அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்த பிரசாரத்தின் நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெறுகிறது.
சிறை நிரப்பு போராட்டம் ஏன்? என்ற தலைப்பில்
வி.களத்தூரில் தெருமுனைப்பிரச்சாரம், மக்கள் சந்திப்பு, நோட்டீஸ் பிரச்சாரம், போஸ்டர் பிரச்சாரம் என தொடர்ந்து நடந்து வருகிறது.
பொய் வழக்கு, சித்ரவதை, தீவிரவாத முத்திரை, கருப்பு சட்டம் என
தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து
போராட அழைக்கிறது....
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா
வி.களத்தூர் நகரம்.
பெரம்பலூர் மாவட்டம்.
நன்றி.வி.களத்தூர்லீருந்து.முகம்மதுபாரூக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக