வண்ணாரம்பூண்டி கிராமத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரி முதுகலை சமூக பணித்துறை மற்றும் வேல்டு விஷன் இந்தியா சார்பில் வளர் இளம் பெண்களுக்கான கல்வி முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வேல்டு விஷன் இந்தியா, சமூக முன்னேற்ற ஒருங்கிணைப்பாளர் வேதாச்சலம் தலைமை வகித்தார். ஆசிரியை சுதா, வளரும் இளம் பெண்களை பற்றியும், மனநலம், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி வாழ்த்திப் பேசினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை முதுகலை சமூக பணித்துறை மாணவிகள் செய்திருந்தனர். முன்னதாக சுகன்யா வரவேற்றார். மாணவிகள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக