அபுதாபியில் தொழில் நகரமான முஸப்பாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளன. இதில் 10 பேர் மரணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை அறிந்த தியணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இக்கட்டிடத்தின் கீழே கார் பழுதுநீக்கும் கடை செயல்பட்டுவந்துள்ளன. இங்கிருந்துதான் தீ உருவாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இக்கட்டிடத்தில் முறைகேடாக தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த்தாகவும் சொல்லப்படுகிறது.
அதில் 10 பேர் மரணிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 5 பேர் வங்க தேசத்தை சார்ந்தவர்கள் என்று அரியவருகிறது. மீதமுள்ளவர்களின் முகங்களும் சிதைந்து காணப்படுவதால் அடையாளம் தெரிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல்துறை புலண் விசாரணை செய்து வருகிறது. முதல் கட்டமாக கட்டிடத்தில் உரிமையாளரும், சூப்பர்வைசரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக