கார்ட்டூன் விளையாட்டுக்களின் நீட்சியாக தற்போது 'போகிமான் கோ' எனப்படும் ஆண்ட்ராய்டு போன் விளையாட்டு தற்போது அமெரிக்கர்களை கிறுக்கிப் பிடித்து நிஜமாகவே 'தெருத்தெருவாக, வீடுவீடாக, சந்து பொந்துகள் என அலைய' விட்டுக் கொண்டுள்ளது மேலும் கார்ப்பரேட் வியாபார கும்பலின் விளம்பர யுக்தியால் உலகளவில் வேகமாய் பரவி வரும் அதேவேளை பல நாடுகள் இதன் ஆபத்தை உணர்ந்து தடை செய்தும் வருகின்றன.
இந்த ஷைத்தானிய விளையாட்டு நமது இரு புனித ஹரம் ஷரீஃப் பள்ளிகளையும் விட்டு வைக்கவில்லை, புதிய மடாஃப் பகுதியில் 5 பேர் போகிமான் விளையாடி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும், போகிமான் இணையதள சவூதி குழுவினர் ஆய்வு செய்த போது இரு புனித ஹரம் பள்ளிகளின் வாசற்கதவுகள், கஃபாவின் மேல் தளம் என இந்த விளையாட்டு தொடர்புபடுத்தப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, புனித ஹரம் ஷரீஃபுகளான மக்கா, மதினா பள்ளிகளின் புனிதத்தன்மை, நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பு அனைத்தும் கேள்விக்குறியாகி வருவதாகவும், ஜிபிஎஸ் சிஸ்டத்தில் கூகுள் மேப் இணைப்பில் இயங்கும் இந்த விளையாட்டை உடனே சவூதியில் தடை செய்ய வேண்டும் என பல மார்க்க அறிஞர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர், இது தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் எச்சரித்துள்ளனர்.
மேலும், இரு புனித ஹரம் ஷரீஃபிலும் சமீபகாலமாக போட்டோ, வீடியோ, செல்ஃபி எடுத்தல் என சகட்டுமேனிக்கு பெருகி தற்போது போகிமான் விளையாட்டு வரை நீண்டுள்ளதால் மொத்தமாகவே மொபைல் போன் பயன்பாடுகளை இரு புனித ஹரம் ஷரீஃப் மஸ்ஜிதுகளின் புதிய மடாஃப் ( Mataf ) பகுதியில் தடை செய்யவும் அல்லது 3G 4G போன்ற சேவைகளை இரு புனிதப்பள்ளிகளை சுற்றி நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக எழுந்து வருகிறது.
Source: Arab News
Dated: 28.07.2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக