Breaking News
recent

சவுதி அரேபியா, குவைத்தில் வேலையிழந்து தவிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவ ஏற்பாடு.!


சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் வேலை இழந்து தவித்து வரும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வேலையிழந்து தவித்து வரும் இந்திய தொழிலாளர்களுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சவுதி அரேபியா மற்றும் குவைத் அதிகாரிகளுடன் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க மத்திய மந்திரி வி.கே.சிங் விரைவில் சவுதி அரேபியா செல்ல உள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.