கடந்த சனிக்கிழமை(16\07\16) ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் முடிந்த பிறகு அமுல் சிங் என்ற ஆராய்ச்சி துறை மாணவர் விடுதிக்கு சென்று கொண்டு இருந்தார். திடீரென இருபதுக்கும் மேற்பட்ட ஏபிவிபியின் மாணவரணியினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர், கீழே தள்ளி வயிற்றில் ஏறி மிதித்து உள்ளனர் .
உயிருக்கு பயந்து அவரது நண்பருடன் ஓடியுள்ள அவரை விடாமல் துரத்தி துரத்தி கல்லூரி வளாகத்திலேயே அந்த கொலைகாரக் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. பிலால் என்ற காஷ்மீர் மாணவரை தேடி வந்துள்ளார்கள் பிலால் என நினைத்து அமுல் சிங்கை அடித்து தாக்கியுள்ளனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக