Breaking News
recent

துபாயில் நர்ஸ்களுக்கு ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை.!


தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமய மூர்த்தி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துபாயில் உள்ள மருத்துவப் பணி மற்றும் அவசர முதலுதவி ஊர்தி சேவை (ஆம்பு லன்ஸ்) நிறுவனத்துக்கு பெண் நர்ஸ்கள் தேவைப்படுகின்றனர்.

 இப்பணியில் சேர விரும்புவோர் பி.எஸ்சி. நர்சிங் முடித்திருக்க வேண்டும். அத்துடன் எமர் ஜென்ஸி மற்றும் டிரோமா கேர் பிரிவில் 3 ஆண்டு அனுபவம் அவசியம். 

ஏசிஎல்எஸ், பிஏஎல் எஸ், ஐடிஎல்எஸ் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு கல்வி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் சுயவிவ ரம் (பயோ-டேட்டா) அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனு பவம் தொடர்பான சான்றிதழ் களின் நகல்கள், பாஸ்போர்ட் நகல் மற்றும் ஒரு புகைப்படத்தை ovemclsn@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

கூடுதல் விவரங்கள் அறிய 82206 34389, 044-22505886 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.