Breaking News
recent

வி.களத்தூரில் நடைபெற்ற சஹர் விருந்து.!


வி.களத்தூரில் இன்று சஹர் விருந்து நடைபெற்றது. வருடா வருடம் ரமலான் மாதத்தில் இந்த சிறப்பு சஹர் விருந்து நடைபெறுவது வழக்கம். இந்த விருந்தானது 2009 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டது. 

முதலில் வி.களத்தூரில் உள்ள இரண்டு சங்கத்து இளைஞர்களுக்கும் சஹர் விருந்து பரிமாரப்பட்டது பிறகு படிப்படியாக ஊரில் உள்ள அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் என்று வருடம் வருடம் அதிகரிக்கப்பட்டு இன்று ஊரில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் என்ற முறையில் சுமார் 1300 நபர்களுக்கு இந்த சஹர் நேர விருந்து தயார் செய்யப்பட்டது.

அதிகாலை சுமார் 2.15 முதல் ஆரம்பமான இந்த விருந்தானது 4 மணியளவில் நிறைவுபெற்றது. 1250 நபர்களுக்கு மேற்பட்டவர்கள் இந்த  விருந்தில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். கம கமவென ஜாமியா மஸ்ஜித் வளாகத்திலும் ஐடியல் பள்ளி மைதானத்திலும் பிரியாணியின் வாசனையும் மணமும் அந்த பகுதி முழுக்க பரவி இருந்தது.

விருந்தில் கலந்துக் கொண்டவர்களிடம் விருந்தை பற்றி கேட்டபோது மிகவும் சிறப்பானதாக இருந்ததாக கூறினார்கள். இந்து விருந்துக்கு யாரையும் விட்டு வைக்கவில்லை, எல்லா அமைப்புகள், இயக்கங்கள் ஜமாத்தார்கள் நாட்டாண்மைகள், நிர்வாகத்தினர்கள் என அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு இந்த சிறப்பு சஹர் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.














VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.