Breaking News
recent

சவுதி அரேபியாவில் பேய் பிடித்ததாக குழந்தையை ஓடும் காரில் இருந்து வீசி எறிந்து கொலை செய்த தந்தை.!


சவுதி அரேபியாவில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது என நினைத்து ஓடும் காரில் இருந்து வீசியெறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் மனாமா  நகரில் ஒரு நபர்  தனது மனைவி மற்றும் 4 மாதக்குழந்தையுடன் காரில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது,  அந்த நபர் காரின் ஜன்னல் வழியாக குழந்தையை திடீர் என தூக்கி எறிந்துள்ளார்.

இதனைப்பார்த்த மனைவி என்ன செய்வதென்று தெரியாமல், காரில் இருந்து இறங்கி தனது குழந்தையை காப்பாற்ற ஓடியனார் அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது  இதில் தயார் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

ஓடும் காரில் இருந்து வீசி எறியபட்ட குழந்தையும் உயிரிழந்தது, இது குறித்து போலீசார் விசாரணையில்

தனது குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது எனக்கூறி, தந்தை பயங்கரமாக குழந்தையை அடித்துள்ளார். அதன் முடிவில்தான் குழந்தையை காரின் ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார், மேலும் மனைவியும் காரில் இருந்து இறங்கிவிட்டாலும், அதனைப்பொருட்படுத்தாது சென்ற இவரை போலீசார் பின்தொடர்ந்து சென்று விரட்டி பிடித்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கு மெக்காவில் நடைபெற்று வந்த நிலையில், இவருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனையும், 1,500 கசையடிகளும் வழங்க உத்த்ரவிடபட்டு உள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.