இந்நிலையில், பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியாகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10.72 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி உள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே மாதம் 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.
மேலும், தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in என்ற இணையதளங்களிலும் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக