Breaking News
recent

பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதியை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.!


பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் இந்த தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியாகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10.72 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே மாதம் 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.

மேலும், தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in என்ற இணையதளங்களிலும் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.