உலகம் இன்றைய ஆங்கில புத்தாண்டு தினத்தை கோலாகலமாக கொண்டாடுவது தவறில்லை. ஆனால் அரபுலகம் என்றும் அல்லாஹுவின் தூதரை அச்சு பிசுராமல் பின்பற்றுகிறோம் என்று மார்தட்டிகொள்ளும் சில பிரதேசங்கள் ஆங்கில புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடும் காட்சிகளை பார்த்து மனம் நொந்துகொள்வதை தவிர நம்மால் ஒன்று செய்ய இயலவில்லை.
உலகமும் சிரியாவும் உலகம் இன்றைய தினத்தில் தங்களது கொண்டாட்டத்திற்காக வெடிகளை வெடித்து ஆனந்தம் கொள்கிறார்கள். ஆனால் சிரியாவில் என்ன நடக்கிறது. அங்கும் வெடிகள் வெடிக்கிறது அந்த குப்பார்களின் சூழ்ச்சியால் ஆனால் அந்த குண்டுகளினால் சந்தோசம் வரவில்லை. ரத்தங்கள் தான் வருகிறது இழப்புகள் தான் நம்மை வந்தடைகிறது.
துபாய் போன்ற நாடுகள் தங்களது நாட்டை உலகம் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் கோடிகளுக்கு மேலாக ஒரு மணிநேர கூத்துக்கு செலவிட்டுள்ளார்கள். ஆனால் அதே முஸ்லீம்கள் உணவின்றி உணவுக்கு பணம் இன்றி மடிந்தவண்ணம் இருக்கிறார்கள். உலகத்திற்காக தனது கண்களை விரித்து காசுகளை கொட்டும் துபாய்க்கு உணவின்றி ஆதரவின்றி தவிக்கும் நாடுகள் அங்கு வாழும் சொந்தங்கள் அனைத்தும் தெரியவில்லையோ என்ற கேள்விகள் தோன்றுகிறது
வீண்விரயம் செய்யும் ஒருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
எங்களை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.
ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல். தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக