துபாய் ஈமான் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 43 ஆவது தேசிய தினம் கொண்டாடப்பட்டது.இதில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் போட்டிகளில் பங்கேற்று பரிசு கோப்பைகளை வென்றனர்.
துபாய் ஸபீல் பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஈமான் கல்சுரல் சென்டர் சார்பில் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். துணை பொது செயலாளர் தாஹா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
இந்நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழகத்தை சேர்ந்த தினேஷ்குமார் உதை பந்து போட்டியில் முதலிடம் பெற்றார். மேலும் பலர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றனர்.
தமிழகத்தை சேர்ந்த தினேஷ்குமார் உதை பந்து போட்டியில் முதலிடம் பெற்றார். மேலும் பலர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கினைப்பாளரும் முன்னாள் எம்பியுமான அப்துல் ரஹ்மான்,விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான் ஆளூர் ஷா நவாஸ்,
முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளருமான மில்லத் இஸ்மாயில்,இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாநில கல்விப்பணி செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் ,ஈமான் கல்விகுழு தலைவர் பி.எஸ்.எம்.ஹபீபுல்லாஹ்,
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஊடக பிரிவு ஒருங்கினைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், தொழிலதிபர் ஆலியா டிரேடர்ஸ் சேக் தாவூத் உள்ளிட்ட பலர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள வழங்கினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஈமார் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் மூசாவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக