Breaking News
recent

ரூபாய் நோட்டை மாற்ற ஆதார் நகலை கொண்டு செல்பவர்கள் உஷாராக இருங்கள்….!


ஆதார் அட்டை நகலை அடையாளச் சான்றாக ‌அளிக்கும் போது முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும் என பொது மக்களை அரசு எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக ஆதார் அட்டை நகலை வங்கிகளிடம் சமர்பிக்கிறார்கள். அந்த நகலை சிலர் தவறாக பயன்படுத்தி, தினசரி மீண்டும், மீண்டும், பழைய பணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அடையாள அ‌ட்டை ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொது மக்கள் வங்கிகளுக்கு ஆதார் அடையாள நகலை அளிக்கும் போது எதற்காக அந்த நகல் வழங்கப்படுகிறது என்பதையும் வழங்கும் நாள் மற்றும் நேரத்தையும் அதில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எப்போது ஆதார் நகல்களை அளித்தாலும் இவற்றை குறிப்பிடுவது சிறந்த பழக்கம் என்றுரும் அவர் தெரிவித்தார்.
ஆதார் பதிவு என்பது மின்னணு பூர்வமாக சோதிக்க கூடியது, பாதுகாப்பானது என்றாலும் இதிலும் மோசடிகள் சிறிதளவு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். ரூபாய் நோட்டு மாற்றும் போது ஆதார் நகல் தர வேண்டியுள்ளது. இந்த நகலை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதிகாரபூர்வ அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.