கடந்த செப்டம்பர் மாதம் அல்ஜீரியாவில் நடைபெற்ற பெட்ரோல் உற்பத்தி கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் தீர்மானித்தபடி, நாளொன்றுக்கு 33.64 பில்லியன் பேரல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய் 32.5 இருந்து 33 பில்லியன் பேரல்கள் என உற்பத்தி குறைக்கப்பட்டதால் தற்போது சர்வதேச மார்க்கெட்டில் பேரல் ஒன்று 49.23 டாலருக்கு விற்பனையாகிக் கொண்டுள்ளது அதாவது 0.67 டாலர் (சென்ட்) உயர்ந்துள்ளது.
அதேவேளை, அமெரிக்க சந்தையில் பேரல் ஒன்று 0.70 சென்ட்டுகள் ஏற்றம் கண்டு 48.58 டாலர் என விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா நகரில் பெட்ரோல் உற்பத்தி கூட்டமைப்பு நாடுகளின் அடுத்த மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பெட்ரோலிய உற்பத்தி குறைப்புக்கு மறுத்த ஈரான், ஈராக் போன்ற நாடுகளும் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf news
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக