Breaking News
recent

பிரான்ஸில் கத்தார் பெண்களிடம் கொள்ளை.!


பிரான்ஸ் தலைநகர் பாரிசின் வட பகுதியில் கத்தாரை  சேர்ந்த இரு பெண்களிடம் கொள்ளையிடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முகமூடி அணிந்து  இருவர் 56 லட்சம் அமெரிக்க டலர் பெறுமதியான பல பொருட்களை கொள்ளையிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தங்க ஆபரணங்கள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சகோதரிகளான இருவரும் லீ போகற் பஸ்  நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அவர்களது வாகனம் பலவந்தமாக நிறுத்தப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபிய இளவரசரும் இதே இடத்தில் கொள்ளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.