Breaking News
recent

அபுதாபியில் சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டுவோருக்கு பரிசுகள் கூப்பன்கள்.!(photos)


அபுதாபி போக்குவரத்து காவல்துறையினர் Happiness Patrol Project எனும் மகிழ்ச்சியான ரோந்து திட்டம் என்ற புதிய போலீஸ் பிரிவை துவக்கியுள்ளனர். 

இந்தத் திட்டத்திற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ரோந்து வாகனத்தில் வரும் போலீஸார் உங்களை இடைமறித்து நிறுத்தினால் அதிகபட்சம் உங்களுக்கு ஆச்சரிய பரிசு கூப்பன் தருவதற்காகவே இருக்கும் என்றாலும் சிலவேளை சாலை விதிகளை மீறுவோரையும் இவர்கள் நிறுத்தி அபராத கூப்பனையும் தர அதிகாரம் பெற்றவர்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.

நீங்கள் சாலை விதிகளை மதித்து வாகனத்தை கவனமாக ஓட்டுகின்றீர்களா என்பதை உன்னிப்பாக கவனிக்கும் இந்த போலீஸ் பிரிவினர் தரும் சுமார் 300 திர்ஹம் பெறுமானமுள்ள பரிசுக் கூப்பன்களை பிரபல மால்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பரிசுப் பொருட்களாக பெற்றுக் கொள்ளலாம் அதேவேளை சிறிய அளவில் சாலை விதிகளை மீறினால் அன்புடன் கண்டித்து அல்லது கால்பந்து விளையாட்டில் உள்ளது போல் மஞ்சள் அட்டையை வழங்கி எச்சரித்து அனுப்புவர்.

இந்த திட்டத்தின் கீழ் வாகன ஓட்டுனர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வாகனப் பயணிகள் மற்றும் பாதசாரிகளும் கண்காணிக்கப்படுவர்.

இன்டிகேட்டர் போடாமல் லேன் மாறுவோர், தவறாக பார்க்கிங் செய்வோர், வாகன அனுமதியை புதுப்பிக்காதவர்கள், ஓட்டுனர் அனுமதியை புதுப்பிக்காதவர்கள், இரவில் முன்விளக்கை எரிய விடாதோர், அனுமதிக்கப்படாத இடத்தில் ரோட்டின் குறுக்கே நடந்து செல்வோர் என 27 வகையான சிறு குற்றங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அட்டை கட்டாயம் வழங்கப்படும்.

அதேவேளை பெருங்குற்றங்களான அதிக வேகம், போதையில் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்குரிய அபராதம் மற்றும் தண்டனைகளையும் தர வல்லவர்கள் இந்த போலீஸார் என்றாலும் இவர்களுடைய நோக்கம் சாலை விதிகளை மதிக்கும் உங்கள் முகங்களில் புன்னகையை மட்டுமே.






Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.