Breaking News
recent

இந்துக்களுடன் இணைந்து யாகம் செய்யும் இஸ்லாமியர்கள்.!


மதச் சண்டைகள், சாதிச் சண்டைகளை கேட்டும், பார்த்தும் சலிப்பு தட்டிய மக்களுக்கு இது சற்று மகிழ்ச்சியான செய்தி. 

கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து யாகம் செய்கிறார்கள். இந்திய ராணுவ வீரர்களுக்காக இந்த யாகம் நடத்தப்படுகிறது. 

அதாவது, இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்களின் உயிரிழப்பை தடுப்பதற்காக 'மிர்த்யுஞ்சயா' யாகம் நடத்தப்படுகிறது.

அங்கு 400 வருடம் பழமை வாய்ந்த ஶ்ரீ துர்கா பகவதி கோவிலில் வருகின்ற நவம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் இந்த யாகம் நடத்தப்படுகிறது. 

இந்த யாகத்துக்கான செலவுகளை இந்துக்களும், இஸ்லாமியர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். குறிப்பாக கே.பி. சுலைமான் என்ற இஸ்லாமியர் இந்த நிகழ்வின்போது 2 ஆயிரம் பொதுமக்களுக்கு அன்னதானம் செய்கிறார். 

இது குறித்து அந்த ஊர் மக்கள், "மதத்தின் பெயரால் மக்கள் சண்டை போட்டுக் கொள்வது மிகவும் வருத்தமாக உள்ளது. எங்களுக்குள் எந்த பிரிவினையும் கிடையாது. 

ஒற்றுமையாக இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறோம். நமக்காக எல்லையில் கஷ்டப்படும் ராணுவ வீரர்களுக்காக வேண்டுவது நம் ஒவ்வொருவரின் கடமை" என்கிறார்கள்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.