Breaking News
recent

அபூதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எதிஹாத் விமானம்.!


நேற்று புதன் பகல் 12.06 மணியளவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு 329 பயணிகளுடன் புறப்பட்ட EY450 என்ற எண்ணுடைய போயிங் - 777 வடிவ விமானம் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறால் புறப்பட்ட 32 வது நிமிடத்தில் மீண்டும் அபுதாபி விமான நிலையத்தில் பத்திரமாக இறக்கப்பட்டது.

விமானிகள் மற்றும் விமான சிப்பந்திகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் அவசரகால நிலையை கையாளுதல் குறித்த சிறப்பு தொடர் பயிற்சிகளால் விமானமும் பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர் என எதிஹாத் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு மாற்று விமானம் மூலம் சிட்னி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தால் பகல் 12.50 வரை விமான நிலையம் மூடப்பட்டதுடன் அந்த நேரத்தில் தரையிறங்கவிருந்த ஒரு விமானம் ஷார்ஜாவிற்கும் மற்றொரு விமானம் அபுதாபியின் அல் பத்தீன் விமான நிலையத்திற்கும் திருப்பிவிடப்பட்டன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.