Breaking News
recent

POKEMON GO:கத்தார் அரசின் அதிரடி நடவடிக்கை.!


கத்தாரில்அ ரச  அலுவலகங்களில் ‘பொகேமொன் கோ’ விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலக நேரங்களில் குறித்த விளையாட்டை விளையாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரேபிய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விளையாட்டின் போது ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் ஒரு முக்கிய அம்சம் என்பதால், அதன் மூலம் அலுவலகம் அதன் செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கசியக்கூடிய அபாயம் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அந்நாட்டு தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் பலநாடுகளில்  ‘பொகேமொன் கோ’ வெகுப் பிரபலம் அடைந்துள்ளது. எனினும் பல நாடுகளில் இதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.