அபுதாபி லைலத்துல் கத்ர் கமிட்டியின் சார்பில் லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அபுதாபியில் உள்ள இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தமிழக முஸ்லிம்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இஷா, தராவீஹ், தஸ்பீஹ் ஆகிய தொழுகைகளுடன் தொடங்கிய இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஹள்ரத் துவக்க உரையாற்றினார். லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா ஏ.நூருல் அமீன் ஹள்ரத் லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை பற்றி சிறப்புரையாற்றினார். மௌலானா ஹாஃபிழ் காயல் எஸ்.எம்.பி. ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரி ஹள்ரத் அரபியிலும், தமிழிலும் உள்ளம் உருக நீண்ட பிரார்த்தனை செய்தார்.
அபுதாபியில் உள்ள தமிழக முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அபுதாபி லைலத்துல் கத்ர் கமிட்டியினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக