இது மேலும் பல்வேறு சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் நோல் அட்டைகள் வரும்காலத்தில் மின்-பணப்பையாக (e-wallet) மாற்றத்தக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நோல் கார்டுகளை கொண்டு பூங்கா (Parks) மற்றும் அருங்காட்சியக (Museum) அனுமதி சீட்டுக்களை பெறவும், வாகனங்களுக்கு உள்ளது போல் ஒவ்வொருவருக்கும் தனித்தனி நோல் அட்டைகள் என்றில்லாமல் ஒரே அட்டையை கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தலாம்
என்றும் ஆனால் அதற்குத் தேவையான முன்பணம் நிரப்பப்பட்டிருக்க (Prepaid) வேண்டும் எனவும் துபை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு நுழைவு வாயில்கள் (Smart Gates) ஏற்படுத்தப்படும்.
மேலும், சுமார்ட் துபை (Smart Dubai) திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டிற்குள் அனைத்து மின்-சேவை (e-services) திட்டங்களும் மொபைல் சேவை (Smart Services) திட்டங்களாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள 351 மின்-சேவைகளில் 204 சேவைகள் மொபைல் சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Source: Gulf News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக