இன்று 27 ஆம் இரவாகும் நீங்கள் ஊரில் இருந்தால் உங்களுக்கு என்ன வேலையாக இருந்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த இரவில் கியாமுல் லைல் தொழுகையிலும் இதர பிராத்தனைகள் என அனைத்திலும் கலந்து கொள்ளுங்கள்.
வி.களத்தூரில் உள்ள பெரிய பள்ளிவாசல்கள் மற்றும்
ஒரு சில பள்ளிவாசல்களிலும் ரமழான் நோன்பின்கடைசிப் பத்துகளில் இரவு 11.30 மணியளவில்நடைபெறுகின்றது. நீங்கள் அனைவரும் இதில்கலந்து கொள்ளுங்கள்.
மேலும் பாவ மன்னிப்பு தேடதவர்கள் உன்னே பாவ மன்னிப்பை தேடுங்கள் இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்றன.
என் என்றால் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள் ஜிப்ரீல் [அலை] என்னிடம் வந்து யார் புனித ரமழான் மாதத்தை அடைந்தும்
அதில் பாவமன்னிப்பு பெறவில்லையோ, அவர்
நாசமடையட்டும் என்று கூறினார்கள்.
அதற்கு நான் ஆமீன் கூறினேன்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்த வராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்றுவணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும். [அபூஹுரைரா (ரலி)- புகாரி (35) ]
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போதுஅது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது
எனவேஅதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள்.
அது ஒற்றைப்படை இரவான 21, 23, 25 ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்'' என்று சொல்லி விட்டு, யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் நின்று வணங்குகிறாரோ
அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறினார்கள்.
[ உபாதா பின் ஸாமித் (ரலி)-அஹ்மத் (20700) ]
லைலதுல் கதிர் இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.[ முஆவியா (ரலி) -அபூதாவூத் (1178 ]
யா அல்லாஹ் இந்த லைலத்துல் கதிருடைய இரவை அடையக்கூடிய பக்கியத்தை தந்தருள் வாய்யாக அதன் மூலம் எங்கள் பாவங்களை மன்னித்துதூய்மையானவர்களாக ஆகிக் அருள்வாயாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக