Breaking News
recent

கத்தார் உச்ச நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்.!


கத்தாரில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரு தமிழர்கள் சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணியன் (புதுக்கோட்டை), சிவக்குமார் (சேலம்), செல்லதுரை பெருமாள் (விருதுநகர்) ஆகிய மூவரும் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூதாட்டியைக் கொலை செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் 2012-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். 

இதில் சிவக்குமாருக்கு ஆயுள் சிறையும் மற்ற இருவருக்கும் தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு சார்பில் சுமார் ரூ. 9.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்டதன்பேரில், 3 தமிழர்கள் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவலை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.