இராஜஸ்தானில் லாரியில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய இளைஞரை நிர்வாணமாக்கி, அடித்து துன்புறுத்தி அதை படங்களாகப் பிடித்து இந்துத்துவ வெறியர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். மே 30-ஆம் தேதி நடந்திருக்கிறது இந்த சம்பவம்.
‘கவ் ரக்ஷா தள்’ (பசு பாதுகாப்பு இயக்கம்) என்ற கும்பல், பசுவைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மனிதத்தன்மையற்ற செயல்களைச் செய்து அதையே பெருமையாக பகிர்ந்தும் வருகிறார்கள்.
இந்தச் சம்பவத்தின் போது, போலீஸ்காரர் ஒருவரும் அருகில் இருக்கிறார். ராஜஸ்தானில் பாஜக ஆள்கிறது.
இந்தப் படங்களை வெளியிட்டிருக்கும் Milli Gazette இந்த வன்முறையாளர்களிடம் பேசிய போது, “எங்களுடைய சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி அடிப்பதால் அவர்கள் சாகமாட்டார்கள். ஆனால், அவர்களால் பல மாதங்களுக்கு நடக்கவோ, உட்காரவோ முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக