Breaking News
recent

முஸ்லிம் மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற தமிழகம் முழுவதும் இலவச பயிற்சி.!


மத்திய,மாநில அரசுப்பணிகளில் மிக மிகப் பின்தங்கிய நிலையிலுள்ள இஸ்லாமியர்களின் பிரநிதித்துவத்தை அதிகரிக்கும் பொருட்டு முஸ்லிம் மாணவர்களுக்கு தமிழகத்தில் சென்னை, மதுரை,திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர்,சிதம்பரம் ஆகிய நகரங்களில் துபாயில் பணிபுரியம் முஹம்மது பைஜூர் ரஹ்மான் அவர்களை நிறுவனராக கொண்ட (AIMS WELFARE SOCIETY) இலவச பயிற்சி மையங்களை தொடங்க உள்ளது.

அதன் முதற்கட்டமாக மதுரையில் முதல் பயிற்சி மையம் வரும் ஜூலை 16 அன்று மதுரை ஐக்கிய ஜமாஅத் உதவியுடன்,அரசு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக தொடங்க உள்ளது.

தமிழக அரசின் குரூப்-1,குரூப்-2,குரூப்-4,VAO தேர்வுகள் முதல் இந்திய அரசின் IAS தேர்விலிருந்து அனைத்து UPSC தேர்வுகளுக்கும் இலவச பயிற்சியளிக்கப்படும்.

தன்னம்பிக்கை,விடாமுயற்சி,கடின உழைப்பு,அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்ட 12 வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்த ஆண்,பெண் முஸ்லிம் மாணவர்களை முற்றிலும் இலவசமாக, தமிழகத்தின் தலைசிறந்த பயிற்சி பெற AIMS அன்புடன் அழைக்கின்றது.

இவ்வாய்ப்பினை பயன்படுத்த தவறாதீர்! நீங்கள் கடின உழைப்புக்கு தயாரெனில் நாங்கள் உங்களை அரசு ஊழியர்களாக உருவாக்குவோம். 

இன்றே உங்கள் விபரங்களை பதிவு செய்யுங்கள் இவ்விணைப்பில் (Application Form)… http://aimstn.com/Registration.php
புகைப்படத்திலுள்ள தகவல்களை முழுமையாக படிக்கவும்.

இத்தகவலை முகநூல் மட்டுமின்றி WHATSAPPயிலும் பகிருங்கள்.பலர் பயனடையக்கூடும்.
இந்த அருமையான நற்செயலை நாமனைவரும் முன்னேடுக்கலாமே!

தமிழகம் முழுவதும் மையங்களை தொடங்க விரும்பும் சமுதாய ஆர்வலர்கள் தொடர்பு கொள்ள:அலைபேசி மற்றும் வாட்ஸ் ஆப் எண்: 9994347007 E-mail:aimstn2016@gmail.com,info@aimstn.com
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.