ரியாதின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்-ஹம்ராவில் காலித் மற்றும் சாலே ஆகிய இரட்டையர் தங்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். வெள்ளிக்கிழமையன்று இருவரும் வீட்டின் ஸ்டோர் ரூமில் வைத்து கூர்மையான கத்தியால் தாயாரை பலமுறை குத்தி உள்ளனர். இதில் 67 வயதான அவர்களது தாய் மரணமடைந்துள்ளார்.
மேலும் 73 வயதான தந்தை மற்றும் 22 வயதான சகோதர சுலைமான் ஆகியோரையும் அவர்கள் கொல்ல முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்கள் வசித்த குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் அவர்கள் தப்பிவந்துள்ளனர். அவர்களும் கத்தியால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
தப்பி வந்த தந்தை மற்றும் சகோரதர் ஆகியோர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, கொலைக்கு முயற்சித்த இரட்டையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக