Breaking News
recent

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதில் டூவீலர் மீது டிப்பர் லாரி மோதி ரகுபதி என்பவர் பலி.!


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது43)

இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு மோட்டார் பட்டறையில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். 

ரகுபதியும், பட்டறைக்கு வந்த குன்னம் தாலுகா கூடலூரைச்சேர்ந்த சாமிதுரை என்பவரது மகன் பாண்டிதுரையும் (22) மோட்டார் சைக்கிளில் துறைமங்கலம் நான்குரோடு வந்துவிட்டு, பட்டறைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். 

மோட்டார் சைக்கிளை பாண்டிதுரை ஓட்டி வந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. 

இதில் படுகாயமடைந்த ரகுபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டிதுரை லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 

டிரைவர் கைது

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கரூரை சேர்ந்த திருமூர்த்தியை (36) கைது செய்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.