Breaking News
recent

S.S.L.C தேர்வு: பெரம்பலூர் மாவட்டத்தில் 96.52 சதவீதம் பேர் தேர்ச்சி.!


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சவுந்தர்யா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு-

தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம் -100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100.

அதே பள்ளி மாணவர் செல்வகணேசும் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். மேலும் பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவி ஹேமலதா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 9577 மாணவர்கள் தேர்ச்சி எழுதினர். இதில் 9244 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.52 சதவீத தேர்ச்சியாகும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.