நியூயார்க் மற்றும் மும்பை நகரங்களுக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எதிஹாட் நிறுவனத்தின் சேவை உலகின் விலை உயர்ந்த விமான சேவையாகக் கருதப்படுகிறது.
மும்பை-நியூயார்க் நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் எதிஹாட் நிறுவனத்தின் ஏர்பஸ் 380 விமானத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வழங்கப்படும் சேவைகளுக்கு இணையான சேவைகள் வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு பேர் தங்கக் கூடிய அளவில் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள படுக்கை அறை வசதியுடன் கூடிய சூட் ரூம், பிரத்யேக செஃப் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கிய இந்த விமானத்தில் ஒருவழிப் பயணத்துக்குக் கட்டணமாக ரூ.25.22 லட்சம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல, இதேவசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லண்டன்-மும்பை இடையே ஒருவழிப் பயணக் கட்டணமாக ரூ.17.25 லட்சமும், அபுதாபி-மும்பை இடையே ஒருவழிப் பயணக் கட்டணமாக ரூ.3.31 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக