அமெரிக்காவில் பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த ஆசிரியை, அதிபர் ஒபாமாவால் கவுரவிக்கப்பட்டார்.அமெரிக்காவில் வசிப்பவர் ரேவதி பாலகிருஷ்ணன்.
இவரது பூர்வீகம் சென்னை. டெக்ஸாசில் தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 2016ம் ஆண்டுக்கான டெக்சாஸ் பகுதியின் சிறந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் விருதுக்கு ரேவதி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேவதிக்கு சிறந்த ஆசிரியைக்கான விருதை அமெரிக்க அதிபர் ஒபாமா வழங்கி கவுரவித்தார்.இதுகுறித்து ரேவதி கூறுகையில், ‘‘இது எனது வேலைக்கு கிடைத்த பரிசு அல்ல.
எனது ஆர்வத்துக்கு கிடைத்த கவுரவம். இந்தியாவை சேர்ந்த எனக்கு கிடைத்த இந்த கவுரவத்தால் என் தாய்நாடே பெருமையடைகிறது’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக