Breaking News
recent

உத்திர பிரதேசத்தில் பசு கடத்தல் சந்தேகத்தில் முஸ்லிம் சுட்டுக்கொலை.!


உத்திர பிரதேசத்தின் மதுராவில் கடந்த ஞாயிறு முஸ்லிம் ஒருவரை அவர் பசுவை கடத்துகிறார் என்ற சந்தேகத்தில் ஒரு கும்பல் சுட்டுக் கொன்றுள்ளது.

காவல்துறை கண்காணிப்பாளர் அருண் குமார் இது குறித்து கூறுகையில், “நள்ளிரவு சமயத்தில் ஒரு வாகனம் அப்பகுதியில் சென்றதாகவும் அந்த வாகனத்தின் மீது சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அந்த வாகனத்தை பின் தொடர்ந்ததாகவும், அதில் நான்கு பசு மாடுகள் ஏற்றபட்டிருந்தது தெரியவந்தது என்றும் கூறியுள்ளார். 
இன்னும் அப்பகுதி மக்கள் அந்த வாகனத்தை நிறுத்த முற்பட அதில் இருந்தவர்கள் மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடியாக கிராம மக்கள் சுடவே வாகனத்தில் இருந்தவர் காயமுற்றார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் அருண் குமார் கூறியுள்ளார்.

காயமடைந்த சஹாபுதீனை கிராம மக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்னரே உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி கூறுகையில், இந்த பகுதியில் கால்நடைகளை கடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் அவ்வப்போது அவர்களுக்கும் கிராம மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருவது சகஜம் தான் என்றும் கூறியுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.