Breaking News
recent

SDPI கட்சிக்கு கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு.!


தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய எஸ்.டி.பி.ஐ. கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.

 இவற்றில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு கேஸ் சிலிண்டர் (எரிவாயு உருளை) சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இத்தகவலை கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்கள் மேற்கண்ட சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று கூறியுள்ள அவர், தமிழக மக்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.