Breaking News
recent

துபாய் இந்திய துணை தூதரகத்தில் பணி நிறைவு பெற்று செல்லும் ஊழியர்களுக்கு பாராட்டு.!


துபாய் இந்திய துணை தூதரகத்தில் பணி நிறைவு பெற்று செல்லும் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
துபாய் இந்திய துணை தூதரகத்தில் அதிகாரிகளாக பணிபுரிந்து வருபவர்கள் தருண் குமார், ரத்னமாலா மற்றும் நீலம் கவுர் மன்னு ஆகியோர் ஆவர். இவர்களில் தருண் குமார் மற்றும் ரத்னமாலா ஆகியோர் துபாய் இந்திய தூதரகத்தில் பணி நிறைவு பெற்று புதுடெல்லி இந்திய வெளியுறவுத்துறைக்கு சென்று அதன் பின்னர் லண்டன் இந்தியனில் உள்ள இந்திய ஹைகமிசனுக்கு செல்கின்றனர். நீலம் கவுர் மன்னு என்ற அதிகாரி பணி ஓய்வு பெற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதர் அனுராக் பூசன் தலைமை வகித்தார். அவர் பணி நிறைவு பெற்றுச் செல்லும் அதிகாரிகள் துபாயில் பணிபுரிந்த காலத்தில் சிறப்புடன் தங்களது பணிகளை மேற்கொண்டனர். இந்திய சமூகத்தினருக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தனர் என பாராட்டினார். தொடர்ந்து அவர்கள் செல்லும் இடங்களில் சிறப்புடன் பணியாற்ற வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தங்களுக்கு அளிக்கப்பட்ட பாராட்டுக்கு பணி நிறைவு பெற்று செல்லும் அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் துணைத் தூதரக அதிகாரிகள் முரளீதரன், சுமதி வாசுதேவ், பாலகிருஷ்ணன், மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.