அந்த விமானம் நடுவானில் பறந்த போது முனிஷாபேகத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதுபற்றி விமான பணிப்பெண்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் விமானியிடம் தெரிவித்தனர். விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
விமானம் சென்னையில் தரை இறங்கியதும் அங்கு தயாராக இருந்த விமான நிலைய டாக்டர்கள் குழுவினர் விரைந்து சென்று முனிஷாபேகத்தை பரிசோதனை செய்தனர்.
ஆனால் மாரடைப்பால் முனிஷாபேகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக