Breaking News
recent

செல்லிடப்பேசி வழியே மின்சாரம் பாய்ந்து சுஹானா முகமது பெண் பலி.!


மலேசியாவில் செல்லிடப்பேசியில் பேட்டரி சார்ஜ் செய்யும் போதே பேசிய பெண் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

மலேசியாவின் ஷெராஸ் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுஹானா முகமது (30). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு செல்லிடப்பேசி பேட்டரியை சார்ஜ் செய்தபடியே உறவினர்களிடம் பேசியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பெண்மீது மின்சாரம் பாய்ந்தது. இந்தச் சம்பவத்தின்போது அவரது கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். 

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த மருத்துவ அதிகாரிகள் சுஹானாவை பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.