மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அங்குள்ள பிரையன்ட் பூங்காவில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள 55வது மலர்க்கண்காட்சிக்காக நான்கு லட்சம் மலர் நாற்றுகளைக் கொண்டு 115 மலர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வண்ணங்களில் பூக்கக்கூடிய பேன்சி, சால்வியா, காலண்டுல்லா, ஜெனியா மற்றும் லாக்ஸ்பெர்க் உள்ளிட்ட 29 மலர் செடிகளும், கொல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்ட டேலியா மலர்செடிகளும் தற்போது பூத்துக்குலுங்கத் தொடங்கியுள்ளன.
கண்களைக் கவரும் வகையில் பலவண்ணப் பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டுரசிப்பதோடு, புகைப்படமும் எடுத்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக