Breaking News
recent

சல்மானுக்கு பிறந்தநாள் - மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த ஆசிய பெண் விடுதலை.!


சவூதி அரேபிய நாட்டில் கற்களால் அடித்து கொலை செய்யப்படவிருந்த இலங்கைப் பெண் தாயகம் வரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் சவூதி அரேபிய நாட்டில் நபர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததன் காரணமாகவே இந்த தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இலங்கைப் பெண்ணுக்கு கற்களால் அடித்து கொலைசெய்யுமாறும், இதனுடன் தொடர்புடைய இளைஞனுக்கு 100 கசையடிகளும் வழங்குவதற்கும் சவூதி அரசு தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து இந்த தண்டனையை வழங்க வேண்டாம் என இலங்கையிலும், உலக நாடுகளிலும் எதிர்ப்புகள் ஏற்பட்டதோடு, இலங்கை அரச தரப்பிலும் சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் இவர்களுடைய கோரிக்கைகளை ஆராய்ந்த சவூதி அரசு, இந்தப் பெண்ணுக்கான தண்டனையை 4 வருட சிறை தண்டனையாக மாற்றி அமைத்தது.

மேலும் கடந்த வாரம் இடம்பெற்ற சவூதி மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு குறித்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமையவே குறித்த பெண் இலங்கைக்கு வரவுள்ளதாக பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.