Breaking News
recent

சாலைவிபத்தில் மோதி கொண்ட இருவர் தொழுகை நேரம் வந்ததும் அண்ணன் தம்பிகளாக தொழுகையில்.!


சாலை விபத்துகள் ஏர்படும் போது விபத்தை ஏர்படுத்தியவரும் விபத்தால் பாதிக்க பட்டவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு கோபத்தோடும் வெறுப்போடும் இருப்பதை நாம் வளக்கமாக பார்க்க முடியும்

இந்த நிலையில் இருந்து மாறுபட்ட ஒரு நிலையை தான் இதோ நீங்கள் பார்க்கும் இந்து படம் விளக்குகிறது

இன்று அரபு சமூக வலை தளங்களில் அதிகம் விரும்ப படும் மற்றும் பகிர படும் படமாகவும் இந்த படம் அமைந்துள்ளது

ஒரு சாலை விபத்தில் இரு வாகனங்கள் மோதி கொள்கினறன விபத்து நடந்ததும் இருவரும் தனது வாகனத்தில் இருந்து இறங்கி போக்கு வரத்து காவல் துறைக்கு தகவல் தருகின்றனர்

காவல் துறையினரின் வருகைக்காக காத்திருக்கும் நேரம் தொழுகையின் நேரமாக இருந்ததால் வீதியிலேயே இருவரும் தொழுகின்றனர்

விபத்தில் தொடர்ப்புடைய இருவரில் ஒருவர் இமாமாகவும் மற்றோருவர் அவரை பின்பற்றும் மஹ்மூமாகவும் நின்று தொழுகின்றர்

விபத்து வெறுப்பு இவைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தொழுகை நேரம் வந்து விட்டால் அனைத்தையும் மறந்து நாங்கள் அண்ணன் தம்பிகளாக முஸ்லிம்கள் அணிவகுப்பார்கள் என்பதை விளக்கும் சிறந்த சான்றுகளில் ஒன்றாக இந்த படமும் நிகழ்வும் அமைகிறது

விபத்தை மதிப்பிடுவதர்காகவும் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் வாகனத்தை சரிசெய்து கொள்ளவும் போக்கு வரத்து காவல் துறையினரின் கடிதம் தேவை என்பதர்காகவே அவர்கள் காவல் துறையைினரை அழைத்து கொண்டனர் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.