நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!
மாவட்டச்செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத 108.5 டிகிரி வெயில் குழந்தைகள், பெரியவர்கள் திண்டாட்டம்.!
அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கப்படாத நிலையில் சூரியனின் வெப்பம் அளவுக்கு அதிகமாக அதிகரித்திருப்பது பொதுமக்களை பலஇன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு அம்மை நோய்களும், பெரியவர்களுக்கு நீர்க் கடுப்பு பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இதுவே பெரம்பலூரின் அதிகப்பட்ச வெயில் அளவாகக் கருதப்பட்டு வந்தது. 23ம்தேதியும் இதேபோல் 106.7டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில் நேற்று மிகமிக அதிகப்பட்சமாக 108.5டிகிரி வெயில்பதிவாகி பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் பெரம்பலூர் நகரிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் விற்பனை செய்யும் கடைகளில் விலையைக்கண்டு அஞ்சி தேங்கிக்கிடந்த ஏர் கூலர்கள், ஏர் கண்டிஷனர்கள் ஆகியவை மளமளவென விற்பனையாகி வருகின்றன. மெத்தைகள் கொதிப்பதால் கயிற்றுக்கட்டில்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
VKALATHURONE
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக