Breaking News
recent

துபாயில் யுஏஇஅளவிலான பேட்மிண்டன் நாளை துவங்குகிறது ! தமிழக வீரர்கள் பங்கேற்பு.!


துபாயில் நாளை 17தேதி முதல் அமீரக அளவிலான பேட்மிண்டன் போட்டிகள் தொடங்குகிறது . குட்வில் விளையாட்டு கிளப் சார்பில் நடைபெறும் இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்களான பிரைம் ஸ்டார் ரவி .

சையத் அலி ,நசீர்,நிசார்,ஃபைசுர் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த போட்டிகள் நாளை மார்ச் 17, 18, 19 மற்றும் 25 ஆகிய தேதிகளில் துபாய் அல் தவார் விளையாட்டு மையத்தில் நடைபெற இருக்கிறது. 

துபாய் விளையாட்டு கவுன்சில் இந்த போட்டிக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த போட்டி ஒற்றையர், இரட்டையர், கலப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசும், சிறப்புக் கோப்பையும் வழங்கப்படும்.

அமீரகத்தில் உள்ள தமிழக வீரர்களும் பங்கேற்கின்றனர். ஊடகத்திற்கான ஆதரவை தினகரன் நாளிதழும் ,ரேடியோ துபாய் தமிழ் எப் எம் 89.4 Tamil 89.4 FM ஆகியவை வழங்குகிறது. மேலும் தொடப்புகு055 41 45 636 / 056 62 42 343 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.