Breaking News
recent

அமீரகம் அஜ்மானில் தவிக்கும் தமிழக(இந்திய) மீனவர்கள் 25 பேரை நேரில் சந்திப்பு.!


2 வருடமாக தாயகம் திரும்ப முடியாமல் அமீரகம் அஜ்மானில் தவிக்கும் தமிழக(இந்திய) மீனவர்கள் 25 பேரை இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ்மாநில தலைவர் திருச்சி முபாரக் அவர்களும் மற்றும் ஷார்ஜா மண்டல தலைவர் ஆடிட்டர் ஹசன் அவர்களும் 16/03/2016 அன்று நேரில் சந்தித்தனர்.

சந்திப்பின் போது மீனவர்களின் பல்வேறு பிரச்சனைகளை பற்றியும், அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் மீனவர்கள் தவிப்பதாகவும் மாநில மற்றும் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தாயகம் அனுப்பி வைக்க வேண்டும் என இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் நிர்வாகிகளிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கைகளை கேட்டறிந்த நிர்வாகிகள் உரிய சட்ட ஆலோசனைகளை வழங்கி, தேவையான உதவிகளை வழங்குவதாகவும், தாயகம் திரும்புவதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
மேலும் இப்பிரச்சனையில் மீனவர்களுக்கு உதவி செய்து வரும் சில நல்லுங்களோடு இனைந்து இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி செயல்படும் எனவும் மீனவர்களிடம் தமிழ்மாநில தலைவர் திருச்சி முபாரக் அவர்கள் தெரிவித்தார்கள்.
சந்திப்பின் போது ஷார்ஜா மண்டல தலைவர் ஆடிட்டர் ஹசன் மற்றும் செயல்வீரர் KM ஷா அவர்களும் உடம் இருந்தனர்.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.