இந்த வீடியோவைப் பார்க்கும் ஒவ்வொருவரையும் சிரிக்க வைத்துள்ளனர் இந்த கலாய் வீடியோவை தயாரித்தவர்கள். வாட்ஸ் ஆப்பில் இது வலம் வருகிறது.
சென்னை: கேரள சட்டசபையில் ஆளுநர் உரையின்போது நடந்த காட்சிகளை வைத்து ஒரு கலாய் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்க்கும் ஒவ்வொருவரையும் சிரிக்க வைத்துள்ளனர் இந்த கலாய் வீடியோவை தயாரித்தவர்கள்.
வாட்ஸ் ஆப்பில் இது வலம் வருகிறது. ஆளுநர் சதாசிவம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் அவையில் உட்கார்ந்துள்ளனர்.
எதிர்க்கட்சியினர் யாரையும் காணவில்லை. சபையே காற்றோட்டமாக காணப்படுகிறது. சதாசிவம் “தம்” கட்டிப் பேசிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் முதல்வர் உள்பட பல அமைச்சர்களும் தூங்கி வழிகிறார்கள்.. பின்பாட்டாக .. கண்ணே கலைமானே பாட்டு!
தமிழக சட்டசபைக் கூட்டத்தை ஒரு விநாடி நினைத்துப் பாருங்கள்.. இதையும் பாருங்கள்.. முதலமைச்சர் ஜெயலலிதா சபையில் இருக்கும்போது ஒரு கொட்டாவி விட முடியுமா… இதுதான் தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக