இம்மாநாட்டினை கீழக்கரையைச் சேர்ந்த நஜிமுதீன், ராஃபி அகமது ஆகியோரின் வழிகாட்டுதலின் படி முகைதீன் அப்துல் காதர், ஜாபர், கமால் உள்ளிட்ட பலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஷேக் முபாரக் மதனீ, சேக் முப்தி உமர் சரீப், சேக் மஜீத் மற்றும் மவ்லவி அப்துல் பாசித் உட்பட பலர் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர். இம்மாநாட்டில் அல்குர் ஆன் கூறும் அழைப்பியல், அல்குர் ஆனை அணுகும் வழிமுறைகள், அல்குர் ஆனின் வெளிச்சத்தில் வாழ்வோம் போன்ற பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
மேலும் உள்ளம் அமைதி பெற வழிகள், மற்றும் இஸ்லாமிய பார்வையில் திருமணம் போன்ற தலைப்புகளில் பல வகுப்புகளும் நடைபெற்றன. மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள், கண்காட்சி, பயிலரங்கம், ஆலோசனைகள் போன்றவைகளும் விழாக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்மாநாட்டில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக