Breaking News
recent

புதிய 10 ரூபாய் நாணயம் வெளியீடு.!



சட்டமேதை அம்பேத்கரின் நினைவாக புதிய 10 ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது.
சட்டமேதை அம்பேத்கரின் 125 வது பிறந்த நாளை வரும் ஏப்ரல் 14ஆம் தேதி மத்திய அரசு கொண்டாடவுள்ளது. இந்நிலையில், அம்பேத்கரின் உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது. அந்த நாணயம் விரைவில் புழக்கத்தில் விடப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாணயத்தின் ஒருப்புறத்தில் அம்பேத்கரின் உருவமும், அதற்கு கீழே அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டு என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் மறுபுறத்தில் மேல் பகுதியில் அசோகர் தூணிலுள்ள நான்முக சிங்க உருவமும், கீழ்ப்பகுதியில் 10 என்ற எழுத்தும், மேல் பகுதியின் வலது புறத்தில் ‘பாரத்’ என்று தேவநாகரி மொழியிலும், இடது புறத்தில் ‘இந்தியா’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.