பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி, கடந்த அக்டோபர்,15ம் தேதி துவங்கி, நவம்பர் 10ம் தேதி வரை நடக்கிறது.
ஜனவரி, 2015ம் முதல் தேதியை தகுதியான நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியான வாக்காளர்களின் பெயர்களை, புதிதாக வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி போன்ற திருத்தங்களை மேற்கொள்ளவும், பெயர் நீக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக அக்.,26 மற்றும் நவ., 2ம் தேதி ஞாயிற்று கிழமைகளில், சிறப்பு முகாம்கள், அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் ஃபோட்டோ அடையாள அட்டையில், பிழைகள் ஏற்படுவதை தவிர்க்க, ttணீ://தீதீதீ.ஞுடூஞுஞிtடிணிணண்.tண.ஞ்ணிதி.டிண/ஞுணூஞுஞ்டிண்tணூச்tடிணிணஎன்ற இணையதளத்தில்
பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல் முதலிய கோரிக்கைகளை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இணைய தளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது வண்ண ஃபோட்டோ ஒன்றை கொண்டு வரவேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் பிரிண்ட் எடுத்து, சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு விசாரணைக்காக அனுப்பப்படும்.
இணையதளம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டிற்கு வந்து விசாரணை செய்வர். அது சமயம் வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சிறப்பு முகாம்கள் நடக்கும் நாட்களை தவிர, இதர நாட்களில் விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள, ஆர்.ஐ., அலுவலகங்களில் இயங்கும் பொதுசேவை மையங்கள், புதுவாழ்வு திட்ட வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இயங்கும் கம்ப்யூட்டர் மையம் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதற்காக கோரிக்கை ஒன்றுக்கு, 10 ரூபாயும், பிரிண்ட் எடுக்க ஒரு பக்கத்திற்கு மூன்று ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக