இந்த இரு மாடி கட்டிடங்களும் தற்போது முழுவதுமாக எரிந்து கொண்டுள்ளன. இக்கட்டிடங்கள் முராகாபாட் போலீஸ் நிலையம் முன்பாக உள்ளன. இதன் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பிடித்த தீ கட்டிடங்களுக்கும் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த தீ விபத்து இந்திய நேரப்படி இரவு 7.25 மணிக்கு நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில முகாமிட்டுள்ள ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களில் இருப்போரை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவரை பாதுகாப்பு படைவீரர்கள் மீட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் க்ரீன் லைன் பகுதியில் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 3.30 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக